பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன்கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், நேதாஜிநகர் காமாட்சிஅம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பால், பழங்கள், பொங்கல், சர்க்கரை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.