நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.