திருவாடானை, திருவாடானை கோயில் குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அகற்றப்பட்டது. திருவாடானையில் மங்களநாதன் குளம் உள்ளது. இக்குளம் அருகே விநாயகர், அய்யனார், ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன.இக் குளத்தில் ஆண்கள் மட்டும் குளிப்பது வழக்கம். மழையால் இக் குளம் நிரம்பும் பட்சத்தில் 2 அல்லது 3 ஆண்டு வரை நீர் தேங்கி நிற்கும். திருவாடானை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வந்தனர். இக்குளத்தில் சீமைக்கருவேல செடிகள் அடர்ந்திருந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மழையால் நீர் தேங்கும் போது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீறி குளிக்கும் போது செடிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆகவே சீமை கருவேல செடிகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.