பதிவு செய்த நாள்
09
அக்
2017
10:10
சபரிமலை:சபரிமலை மேல்சாந்தி தேர்வுக்கு 14 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வுக்கான குலுக்கல் சன்னிதானத்தில் வரும் 17ம் தேதி நடக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு ஒரு மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார். இவர் ஆண்டு முழுவதும் சன்னிதானத்தில் தங்கியிருக்க வேண்டும். தேவசம்போர்டு நிர்வாகிகளும், தந்திரியும் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐயப்பன் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார். வரும் கார்த்திகை மாதத்துக்கான குலுக்கல் தேர்வு வரும் 17ம் தேதி காலை 8.00 மணிக்கு சன்னிதானத்தில் நடக்கிறது.
இதற்காக 14 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விபரம்: சுரேஷ்குமார்- ஆலப்புழா, நாராயணன் நம்பூதிரி-வைக்கம், தாமோதரன் நம்பூதிரி-திருச்சூர், வாசுதேவன் நம்பூதிரி-பெங்களூரு, பிரமோத்- எர்ணாகுளம், ஈஸ்வரன் நம்பூதிரி- ஆலப்புழா, மகேஷ்- மூவாற்றுப்புழா, உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி- திருச்சூர், ஹரிநம்பூதிரி- திருப்பூணித்துறை, சுதீர் நம்பூதிரி-மலப்புறம், சங்கரன் நம்பூதிரி- திருவனந்தபுரம், பிரதீப்குமார்- பெங்களூரு, உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி- ஆலப்புழா. மாளிகைப்புறம்கணேசன்- திருப்பூணித்துறை, அஜயகிருஷ்ணன்- ஆலப்புழா, மகேஷ்- மூவாற்றுப்புழா, பிரமோத்- எர்ணாகுளம், சுரேஷ் ஆர் போற்றி- எர்ணாகுளம், சுதீர்நம்பூதிரி- மலப்புறம், வாசுதேவன் நம்பூதிரி- பெங்களூரு, பரமேஸ்வரன் நம்பூதிரி- மாவேலிக்கரை, கோவிந்தன் நம்பூதிரி- சங்கனாசேரி, அனிஷ் நம்பூதிரி- கொல்லம், கேசவன் நம்பூதிரி- கண்ணுார், கணபதி நம்பூதிரி- சங்கனாசேரி. இதில் பெங்களூரு வாசுதேவன் நம்பூதிரி, மூவாற்றுப்புழா மகேஷ் நம்பூதிரி, மலப்புறம் - சுதீர் நம்பூதிரி ஆகியோர் சபரிமலை மற்றும் மாளிகைப்புறத்துக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சபரிமலைக்கு முதலில் குலுக்கல் நடைபெறும். இந்த மூவரில் யாராவது தேர்வானால், மாளிகைப்புறம் பட்டியலில் இருந்து இவர்கள் பெயர் நீக்கப்பட்டு மாளிகைப்புறத்துக்கு குலுக்கல் நடைபெறும்.