எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று மாறுபட அசுரரை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுகம் ஆனபொரும் நீ அருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!