பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
ஆர்.கே.பேட்டை : சுந்தர விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா இன்று காலை துவங்குகிறது. வரும் 25ம் தேதி, முருகப்பெருமான், சரனை வதம் செய்கிறார். அதை தொடர்ந்து, உற்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார். ஆர்.கே.பேட்டை - திருத்தணி சாலையில் அமைந்துள்ளது சுந்தர விநாயகர் கோவில். தொன்று தொட்டு இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா, இன்று, காலை 6:00 மணிக்கு, கலச ஸ்தாபன பூஜையுடன், சஷ்டி விரதம் துவங்குகிறது. உடன், முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்குகின்றனர். தினசரி காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. வரும் 25ம் தேதி, ஐப்பசி 8ல், சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், முருகப்பெருமான், சூரனை நோக்கி பாணங்களை எய்யும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட உள்ளது. சூரனை வதம் செய்யும் முருகப்பெருமான், வெற்றியுடன் வீதியுலா எழுந்தருளுகிறார்.