காளிப்பட்டி: காளிப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறில், காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அதன்படி, ஐப்பசி முதல் ஞாயிறான நேற்று காலை, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர்மாலை அலங்காரத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.