Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ... சபரிமலை மண்டல பூஜைக்கு 30 சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடல் மாணிக்கம் கோயிலில் அக்.28ல் திருப்புத்தரி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2017
01:10

திருச்சூர்: கேரளா திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் திருப்புத்தரி பூஜை அக்.,28ல் நடக்க உள்ளது.பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். அக்.,28 ல் நடக்க உள்ள புத்தரி பூஜைக்காக, 20 கி.மீ.,ல் பொற்றா என்ற இடத்தில் இருந்து புதிய அரிசி, காய்கறிகளை பக்தர்கள் நடந்தே எடுத்து வருவர். இந்நிகழ்ச்சி அக்.,27ல் நடக்கிறது. சுவாமிக்கு படைக்க பொருட்கள் எடுத்து வரப்படும் இந்நிகழ்வு தண்டிக வரவு எனப்படுகிறது.சுவாமிக்கு படையல் செய்த பின், பக்தர்களுக்கு புத்தரிசி விருந்து வழங்கப்படும். இது அக்.,28 காலை 11:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். இந்த விருந்தை சாப்பிட, கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவர். மறுநாள் மிகவும் புனிதமான முக்குடி என்ற பூஜை நடக்கிறது. இதில் பழங்கால சாஸ்திர முறைகளின் படி மூலிகைகளால், நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கப் பட்டு சுவாமிக்குநைவேத்தியம் செய்யப்படும். இதனை ஆயுர்வேத வைத்தியர்களான முட்டஞ்சேரி மூஸ் குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். இந்த மருந்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் பற்றிய ரகசியம் காக்கப்படுகிறது. அக்.,29 காலை 7:00 முதல் 11:00 மணி வரை மருந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். வயிற்று நோய்களை, இந்த மருந்து பிரசாதம் குணமாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விபரங்கள் அறிய 0480 - 282 6631ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar