பொல்லாப்பிள்ளையார் கோவிலில் ராஜராஜ சோழனுக்கு சிறப்பு ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2017 11:11
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த பொல்லாப்பிள்ளையார் கோவிலில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. சிதம்பரம் அடுத்த திருநாரையூரில் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் நம்பியாண்டார் நம்பிகளின் அருகே ராஜராஜசோழனுக்கு திருவுருவச் சிலை நிறுவி பிறந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், ராஜராஜ சோழனின் 1032வது பிறந்த விழாவையொட்டி அவரது சிலைக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொல்லாப் பிள்ளையார் அன்னதான ட்ரஸ்டி மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.