பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தகால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2017 01:11
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பழநியில் பெரியநாயகியம்மன் கோயிலில் நவ.,24ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. பழநி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. பாண்டியர், சேரர் கால மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ. 90லட்சம் செலவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இதில் கிரானைட் தளம் அமைத்தல், கோயில் கற்சிலைகள், ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளைமுடிந்துள்ளது. இதனையடுத்து நவ.,24ல்கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக இன்று காலை 9:00மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்கின்றனர்.