பதிவு செய்த நாள்
03
நவ
2017
12:11
சேலம்: காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், இரண்டாவது அக்ரஹாரம், காசி விஸ்வநாதர் கோவிலில், நிறைமணி விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாணம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.