பதிவு செய்த நாள்
03
நவ
2017
01:11
தர்மபுரி: தர்மபுரியில், கல்லறை திருநாள் நிகழ்ச்சியையொட்டி, இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் நவ., 2 அன்று, இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக் கின்றனர். அன்றைய தினம், இறந்து போன தங்களின் உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறையில், மலர் அஞ்சலி செலுத்துவர். அதன்படி, இந்த ஆண்டு கல்லறை தினமான நேற்று காலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்க ளிலும், புல், பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு, சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு, தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில், மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி எரியவிட்டு, அஞ்சலி செலுத்தினர். தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள கல்லறையில், நேற்று திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கல்லறைத் திருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக, காலை முதல் நடந்த, கல்லறைத் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும், திரளானோர் பங்கேற்றனர்.