பதிவு செய்த நாள்
03
நவ
2017
01:11
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று அனைத்து ஆத்மாக்களின் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளை, கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறை திருநாளாக கொண்டாடி வருகின் றனர். இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில், கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கல்லறைகளை இறந்தவர்களின் உறவின ர்கள் சுத்தம் செய்தனர். கல்லறைகளை, பல்வேறு பூக்களைக் கொண்டு அலங்காரம் செய் தனர். மேலும் குடும்பத்துடன், மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ணகிரி, தூய பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை சூசை தலைமையில், சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. தொடர்ந்து, இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய, கல்லறைகளை மந்திரித்து பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதே போல் மாவட்டத்தில், எலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி, ராயகோட்டை மற்றும் மதகொண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறைகள், சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.