Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ ... தொரவி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப திருவிழாவுக்குள் கிரிவலப்பாதை விரிவாக்க பணியை முடிக்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
01:11

திருவண்ணாமலை: ’திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவிற்குள், கிரிவலப்பாதை விரிவாக்க பணியை முடிக்க வேண்டும்’ என, கலெக்டர் கந்தசாமி உததரவிட்டார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி, 65 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த, இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதையின் வலதுபுறம், இரண்டு மீட்டர், இடதுபுறத்தில், ஐந்து மீட்டர் தொலை விரிவுபடுத்தப்படுகிறது. பணியின்போது, மரங்களை அகற்றக்கூடாது; பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப்பணிக்காக, சாலையின், இருபுறமும் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் சிதறி கிடக்கும் கற்களால், பக்தர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால், முறையாக பணிகள் நடக்கவில்லை என, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் வந்தது. இதையடுத்து, கிரிவலப்பாதை விரிவாக்கப்பணியை, நேற்று முன்தினம் அவர் ஆய்வு செய்தார். அப்போது, விரிவுபடுத்தப்படும் நடைபாதையில், டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியை அவர் பார்வையிட்டார். மழை நீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறு இடைவெளியில் டைல்ஸ் பதிக்க வேண்டும், பக்தர்கள் நடந்து செல்லும் போது தடுமாற்றம் ஏற்படாத வகையில், மேடு பள்ளமின்றி சமதளத்தில் டைல்ஸ் கற்களை பதிக்க வேண்டும், தீப திருவிழாவிற்குள் பணியை முடிக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar