Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஆராதனை ... சிவன்மலை கிரிவலப்பாதை :750 மரக்கன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹரிஹரன் இசை விழா: சாய் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
01:11

குன்னுார் :’வாழ்க்கையில் சோதனைகளை வேதனைகளாக எடுத்துக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னுார் - ஊட்டி சாலையில், எல்லநள்ளி பிக்கட்டி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷ் கோவிலில், புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் வரும், 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடந்த, 11,12 தேதிகளில், 24 மணி நேர அகண்ட நாம பஜனை நடத்தப்பட்டது. நேற்று, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.அதில், நீலகிரி மாவட்ட சத்யசாய் சமிதி மாணவ, மாணவியரின் படுக பாடல் நடனத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அவர்களுடன் படுகர் இன பாரம்பரிய கலாசார உடையை அணிந்து, பிரபல பாடகர் பத்மஸ்ரீ ஹரிஹரன் நடனமாடினார்.

தொடர்ந்து, ஹரிஹரனின் சிறப்பு பஜனை, பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. சத்ய சாய்பாபாவின் பாடல்கள், கிருஷ்ணர் உட்பட சர்வ மத பக்தி பாடல்களையும் பாடினார். இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட சத்யசாய் சேவா சமிதிகளின் சார்பில், மாவட்ட தலைவர் டாக்டர் ராமு பேசுகையில், ”பகவான் நமக்கு வாய்ப்புகள் பல கொடுக்கிறார். அதனை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும். பகவானால், அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியும்,” என்றார். மதுரை சத்ய சாய் சேவா சமிதி நிறுவன தலைவர் சுப்ரமணியம் பேசுகையில், ”மக்களிடம் அதிகம் அன்பு செலுத்துவதையே சாய்பாபா குறிக்கோளாக கொண்டார். வாழ்க்கையில் சோதனைகளை வேதனைகளாக எடுத்து கொள்ளாமல் நம்பிக்கையுடன் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றார்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 23ம் தேதி பாபாவின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar