விழுப்புரம் : நல்லரசன்பேட்டை கிராமத்தில் உள்ள 5 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த நல்லரசன்பேட்டை கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், சுந்தரவிநாயகர், கங்கை அம்மன், திரவுபதி அம்மன், காமன் மற்றும் பரிவார கோவில்களில், நேற்று காலை மகா கும்பாபிேஷகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை கோ-பூஜை, யாத்ராதானம், மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி, ஒவ்வொரு கோபுர கலசத்திலும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.