ஒரு வார வருமானம் ரூ.27 கோடி: ரூ.7 கோடி ரூபாய் அதிகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2017 01:11
சபரிமலை; சபரிமலை வருமானம் ஒரு வராத்தில் ரூ.27 கோடியாக உயர்ந்தது. இத கடந்த ஆண்டை விட 7 கோடி ரூபாய் அதிகமாகும். மண்டல கால பூஜைக்காக 15-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். வருமானமும் அதிகமாகி வருகிறது. ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் வருமானம் 27 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது கடந்த ஆண்டை விட 7 கோடி அதிகமாகும். அரவணை விற்பனையில் 11.25 கோடியும், காணிக்கையாக 8.64 கோடியும் கிடைத்தது. அறைகள் வாடகையில் 80.73 லட்சம் ரூபாய் கிடைத்தது.