Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: ... சன்னிதானம் தூய்மை பணியில் 300 தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப திருவிழாவையொட்டி போலீசார் கட்டுப்பாட்டில் வந்த கோவில் வளாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. நாளை, 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, 20 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருவிழாவை ஒட்டி, வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர் தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.க்கள், 14 எஸ்.பி.,க்கள், 100 டி.எஸ்.பி.,க்கள்., உள்பட 7,484 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன், 380 தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகம், நகரின் முக்கிய இடங்கள், கிரிவலப்பாதை ஆகிய இடங்களில், மொத்தம், 147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 30ஆயிரம் குற்றவாளிகளின் போட்டோக்களை பதிவேற்றம் செய்து, கணினியின் வழியாக கூட்ட நேரிசலில் குற்றவாளிகள் நடமாடுவதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரை சுற்றி, 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், 35 கண்காணிப்பு கோபுரம் மற்றும் 39 காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. 80 கமாண்டோ படையினர் மலை ஏறும் வழியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தத்தில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar