பதிவு செய்த நாள்
08
டிச
2017
01:12
திருப்பந்தியூர், திருப்பந்தியூர் ஆஞ்சனேயர் கோவிலில், வரும் 17ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூரில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில். இங்கு, வரும் 17ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 35 ஆயிரம் வடமாலை செலுத்தப்பட்டு, ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முன்னதாக, அன்று, காலை, 5:30 மணிக்கு, ஆஞ்சனேயர் திருமஞ்சனமும், தொடர்ந்து, லட்சுமி குபேரர் திருமஞ்சனமும் நடைபெறும். அதன் பின், காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி - பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். பின், காலை, 11:00 மணிக்கு, பஞ்சமுக ஆஞ்சனேயர், 35 ஆயிரம் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.