பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நான்கு லிங்க தரிசன, மூன்று நாட்கள் முகாம் துவங்கியது. இந்தியாவில் புகழ் பெற்ற, 12 ஜோதிர்லிங்கங்களில், காசி விஸ்வநாதர், ராமேஸ்வரம் ராமநாதர், கேதார்நாத் மற்றும் அமர்நாத் பனிலிங்கம் ஆகிய லிங்கங்களை, ஒரே இடத்தில் பொதுமக்கள் தரிசிக்கும் வகையில், மூன்று நாட்கள் முகாம், குமாரபாளையம், ராமர் கோவில் வளாகத்தில், துவங்கியது. ஈரோடு, பிரம்ம குமாரிகள் ராஜ்யோக தியான நிலையம், 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த முகாம் நடத்துகிறது. நிர்வாகி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.