சபரிமலையில் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரே இடத்தில் உணவு வழங்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2017 12:12
சபரிமலை: வரும் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரே வகையான உணவு ஒரே இடத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முன்னோடியாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அன்னதானத்தில் சென்று சாப்பிடுகின்றனர். தேவசம்போர்டு சார்பில் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய அன்னதானம் மண்டபம் மாளிகைப்புறம் கோயில் பின்புறம் திறக்கப்பட்டு அங்கு இடைவிடாது அன்னதானம் நடைபெறுகிறது. இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான மண்டபம் என்று தேவசம்போர்டு பதிவு செய்துள்ளது. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இங்கு உணவு சமைக்கப்படுகிறது. காய்கறி வெட்டுவதும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.மண்டல மகரவிளக்கு சீசனில் தேவசம்போர்டு மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் தேவசம்போர்டு மூன்று நேரமும் உணவு வழங்குகிறது.
இதற்காக அரவணை தயாரிக்கும் இடத்தின் பின்புறம் தனியாக சமையல் நடக்கிறது. இங்கு 300 பேர் அமர்ந்து சாப்பிடும் அறையும் உள்ளது.சமையலை ஒரே இடத்தில் மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தேவசம்போர்டு புதிய தலைவர் பத்மகுமார் கூறினார். வீண் செலவை தவிர்க்கவும், சபரிமலையில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்பதையும் உறுதி செய்யவும் அன்னதானத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.இதன் முன்னோடியாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் ராகவன், சங்கராதாஸ் ஆகியோர் சபரிமலையில் இருக்கும் போது அன்னதானத்தில் சாப்பிடுகின்றனர்.