பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே மாகாளியம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிேஷகம் விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. விழாவையொட்டி, அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.