Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் வரும் 31ல் ... ஐயப்பன் சேவா சங்க ஆண்டு விழாவில் சிறப்பு பூஜைகள் ஐயப்பன் சேவா சங்க ஆண்டு விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் முடிக்காணிக்கை மண்டபம் ‛ரெடி
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் முடிக்காணிக்கை மண்டபம் ‛ரெடி

பதிவு செய்த நாள்

22 டிச
2017
12:12

பழநி, பழநி முருகன் கோயிலில் ரூ.ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பில் நவீன குளியல் வசதிகளுடன் முடிகாணிக்கை மண்டபம் முடிக்கப்பட்டும் திறப்புவிழாவிற்காக முதல்வர் உத்தரவை எதிர்நோக்கியுள்ளனர். திருப்பதிக்கு அடுத்தப்படியாக பழநிமுருகன் கோயிலில் தினமும் பலநுாறு பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். தற்போது சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர்கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும்விடுதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் கோயில் பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என வழங்கப்படுகிறது. சரவணப்பொய்கை, வடக்குகிரிவீதி, வின்ச் ஸ்டேஷன் போன்ற இடங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் முடிக்காணிக்கை நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
 
இதனைத் தவிர்ப்பதற்காக தண்டபாணி நிலைய தங்குவிடுதி வளாகத்தில் ரூ.ஒருகோடியே 62 லட்சம் செலவில் முதல்தளத்துடன் நவீன குளியல்அறைகள், பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட தரைத்தளத்துடன் ஒருங்கிணைந்த முடிக்காணிக்கை நிலையம் கட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது. திறப்பு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவிற்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். தைப்பூச விழாவிற்குள்ளாக இந்நிலையம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், நவீன முடிக்காணிக்கை நிலையத்தில் எலக்ட்ரிக், குழாய்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின்போது, முதல்வர் பழனிச்சாமி திறந்து வைக்க வாய்ப்புள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar