ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் (எட்டு நாகங்கள்) அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், வாலியின் மகன் அங்கதன் ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளனர். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பர்.