பதிவு செய்த நாள்
27
டிச
2017
12:12
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், 32 லட்சத்து 41 ஆயிரத்து 192 ரூபாய், உண்டியல் பணம் வசூல் ஆனது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மார்கழி மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டன.
இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில், பணம் எண்ணும் பணி நடந்தது.
கோவில் வளாகத்தில் நடந்த எண்ணிக்கையில், 32 லட்சத்து 41ஆயிரத்து 192 ரூபாய் பணமும், தங்க நகைகள் 115 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 695 கிராம் ஆகியவை பக்தர்கள் உண்டி யல் காணிக்கை செலுத்தியது கணக்கிடப்பட்டது.
இதில், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், மணி, சரவணன், சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.