Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாவட்ட கோயில்களில் ... போடியில் ஆருத்ரா தரிசனம் போடியில் ஆருத்ரா தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அழியும் திவ்ய தேசங்களின் படங்கள்
எழுத்தின் அளவு:
ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அழியும் திவ்ய தேசங்களின் படங்கள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
12:01

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனித்தாயார் கோயிலில், நிர்வாக அலட்சியத்தால் 108 திவ்ய தேசங்களின் படங்கள் அழிந்து வருகின்றன. வைணவ திருத்தலங்கள் 108 ல் 44வது தலமாக திருப்புல்லாணி ஆதஜெகநாத பெருமாள், பத்மாஸனித்தாயார் கோயில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. தசரத மன்னன் புத்திர பேறு வேண்டி இங்கு யாகம் செய்ததாக கூறப்படுகிறது. பெருமையும், புராண சிறப்பும் மிக்க இந்த கோயில் கும்பாபிேஷகம் கடந்த ஜூன் 4ல் நடந்தது. அப்போது, பெருமாள் கருவறையை ஒட்டிய பிரகாரத்தை சுற்றிலும், 108 திவ்ய தேசங்களின் படங்கள் உபயதாரர்களிடம் நிதி பெற்று வரையப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களே ஆன நிலையில், வடக்கு பகுதியில் உள்ள திவ்ய தேசங்களின் படங்கள் முழுமையாக அழிந்துவிட்டன. மேலும், கோயில் பிரகாரங்களில் உள்ள மின் விளக்குகள் மற்றும், கோயில் முன்பு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கும் நான்கு மாதங்களாக எரியவில்லை. கோயில் கல் துாண்கள் சிதிலமடைந்து வருகின்றன.

கும்பாபிேஷகத்தின் போது இவற்றை சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி மறுத்துவிட்டதே இதற்கு காரணம். கோயிலில் உள்பகுதிகளும், முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. ஆண்டிற்கு இரண்டு முறை கோயில் உண்டியல் எண்ணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் எண்ணப்பட்ட போது, 12 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. அதன்படி, பார்த்தால் ஆண்டிற்கு 24 லட்சத்திற்கும் மேல் வருவாய் வரும் நிலையில், கோயில் பராமரிப்பில், நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar