போடி : போடி சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். திருப்புகழ் சபையை சேர்ந்த பெண்கள் பஜனை பாடினர். சுவாமி அலங்காரத்தை அர்ச்சகர் விக்னேஸ்வரன் செய்தார். தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.