Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனிப்பெயர்ச்சி விழா : ... கோவில்பட்டி அய்யப்பன் கோயிலில் வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள்! கோவில்பட்டி அய்யப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனூர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2011
12:12

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ கர வருஷம், மார்கழி மாதம் 5-ந் தேதி (21-12-2011) புதன்கிழமை, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 7.24 க்கு ஸ்ரீசனீஸ்வர பகவான் கன்னி ராசியை விட்டு துலா ராசிக்கு பிரவேசம் அடைவதை முன்னிட்டு விழுப்புரம் வட்டம், கோலியனூரில் மேற்குமுக ஸ்ரீவாலீஸ்வர சுவாமி திருக்கோயிலில், இராமாயணகாலத்தில் ஸ்ரீவாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு, பக்தர்களின் சங்கடங்களை உடன் நீக்கியருளி தீர்க்காயுளையும், பொன்னையும், பொருளையும், வெற்றியையும் வாரி வழங்கும், வள்ளல் பிரானாக, வன்னிமரத்தடியில், இந்தியாவில் எங்கும் இல்லா வகையில் ஸ்ரீ சங்கடஹர வினாயகர் உடனிருக்க, திருநள்ளாருக்கு நிகரான பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கும், சரித்திரபுகழ் பெற்ற, மிகப் பழமை வாய்ந்த திவ்ய÷க்ஷத்ரமாகிய கோவில்புரநல்லூர் என்னும் கோலியனூரில் தனியாக தெற்குநோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வர பெருமானின் சனிப்பெயர்ச்சி விழாவின் பலன்கள்:

இந்த சனிப்பெயர்ச்சியினால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உத்திரம் 2-ம் பாதம்முதல், அஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை வரையிலான இராசிகாரர்களுக்கு ஏழரைச் சனியின் காலமாகவும், புனர்பூசம் 4 பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை, கடக ராசி காரர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் காலமாகவும், பூரட்டாதி 4 பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய மீனராசிக்கு அஷ்டம சனியின் காலமாக இருப்பதால் மேற்படி இராசிகாரர்கள் தங்கள் சக்திக்கு தக்கவாறு அர்ச்சனை, அபிஷேகம், சாந்தி ஹோமம், தானங்கள் (தானத்தில் சிறந்தது அன்னதானம்) போன்ற பரிகாரங்கள் செய்து நன்மை அடையலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகாரர்களுக்கு மிக நன்மையும் ஏனைய ராசிகாரர்களுக்கு வழிபாட்டினால் நல்ல பலன்கள் உண்டாகும். எனவே இந்த இராசிகாரர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை வழிபடுவது உத்தமம்.

இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (20-12-2011) செவ்வாய்கிழமை மாலை 5-00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்  அன்னதான பிரசாதமும் வழங்கப்பட இருக்கிறது,

சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சிவஸ்ரீ வி. சிவக்குமார்,
1/228, வாலீஸ்வரர் கோவில் தெரு, கோலியனூர் அஞ்சல்,
விழுப்புரம்-605 103.
தொடர்புக்கு : 97909 09733, 75982 31159.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar