Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோலியனூர் கோயிலில் சனிப்பெயர்ச்சி ... திருமணப்பதிவு அலுவலகம் திருமலையில் திறப்பு! திருமணப்பதிவு அலுவலகம் திருமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி அய்யப்பன் கோயிலில் வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2011
12:12

தூத்துக்குடி: சபரிமலை செல்லமுடியாமல் பாதியில் திரும்பிய பக்தர்கள், கோவில்பட்டியிலுள்ள நாற்கரசாலை அய்யப்பன் கோயிலில் இருமுடியுடன்18 படியேறி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். முல்லைபெரியாறு அணை பிரச்னை காரணமாக, குமுளி வழியாக அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியறை வழியாக சபரிமலைக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேனி, கம்பத்தைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 93 பேர் இருமுடிகட்டி, மூன்று வாகனங்களில் புளியறை வழியாக சபரிமலை சென்றனர். கேரள எல்லையில் நுழைந்ததும் பிரச்னை ஏற்பட்டதால் அவர்கள் சபரிமலை செல்லாமல், அங்கிருந்து ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர்.

நாற்கர சாலை அய்யப்பன்: நெல்லை - மதுரை நான்குவழிச்சாலையில், கோவில்பட்டி அருகே சாத்தூர் செல்லும் வழியில் ஆறு மாதத்திற்கு முன் புதிதாக கட்டப்பட்ட நாற்கர சாலை அய்யப்பன் கோயிலை அவர்கள் கண்டனர். உடனடியாக அங்கு வாகனங்களை நிறுத்திய அந்த பக்தர்கள், விடலைத்தேங்காய்உடைத்து இருமுடியுடன் அக்கோயிலின் 18 படிகளில் ஏறி நெய் அபிஷேகம் செய்து அய்யப்பனை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சபரிமலைக்கு செல்லமுடியவில்லையே என்ற மனவேதனை தங்களுக்கு இருந்தது. அதனை, இக்கோயிலுள்ள அய்யப்பன் தீர்த்து வைத்தார் என அவர்கள் மனநிறைவுடன் தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்தினர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். இதுபோல, சபரிமலை செல்ல முடியாத ஏராளமானோர் இக்கோயிலுக்கு இருமுடிகட்டிவந்து அய்யப்பனை வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar