Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்பன் கோவில் திருவிழா: பொங்கல் ... காரக்கொரையில் பூ குண்ட திருவிழா: பக்தர்கள் பரவசம் காரக்கொரையில் பூ குண்ட திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மராயப்பெருமாள் கோவிலில் மார்கழி 23ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திம்மராயப்பெருமாள் கோவிலில் மார்கழி 23ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
12:01

மேட்டுப்பாளையம்:கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராயப்பெருமாள் கோவிலில், நாளை மார்கழி, 23ம் நாள் வழிபாடு நடக்கிறது. இதில், மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்... என்ற திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.காரமடை அருகே கா.புங்கம்பாளையத்தில் திம்மராயப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு திருப்பதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் சுவாமியை போன்று மூலவரும், திம்மராயப்பெருமாள் நீலாதேவி, பூமாதேவி சமேத உற்சவருமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி, சித்திரை மாத கடைசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

கார்த்திகை தீபம், பவுர்ணமி பூஜை, பிரதி மூல நட்சத்திரம், ஆஞ்சநேயருக்கு பூஜை, மார்கழி மாதம், 30 நாட்களும் அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து திருப்பள்ளியெழுச்சியும், அதைத் தொடர்ந்து திருப்பாவை பாடலும் பாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தின், 23ம் நாளான நாளை காலை, மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்... எனத் துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில், உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரியை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து, கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது.அதுபோல கண்ணா...நீயும் வீரநடை போட்டு உன் கோவிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகள் கொண்ட சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளை பரிசீலனைசெய்து, நிறைவேற்றி அருள வேண்டுகிறோம் என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar