உலக அமைதிக்காக சபரிமலையில் விளக்குபூஜை : சிவகங்கை பக்தர்கள் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2018 10:01
சபரிமலை: உலக அமைதிக்காக சிவகங்கை, மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாஸ்கரன் குருசாமி தலைமையில் இந்த சங்கத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாளிகைப்புறம் கோயில் கீழ்பகுதியில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடத்தினர். 150-க்கும் மேற்பட்ட விளக்குகளை ஓம் வடிவத்தில் வைத்து தீபம் ஏற்றி அதை சுற்றி பக்தர்கள் அமர்ந்து பஜனை பாடினர். இதன் நடுவில் கன்னி ஐயப்ப பக்தர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். சபரிமலைக்கு முதன் முறையாக வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காகவும், உலக அமைதிக்காகவும், மக்களின் சுபிட்சத்துக்காகவும் 28 ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுவதாக பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.