Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை பழநி முருகன் கோயிலில் ஐந்து நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தம் பழநி முருகன் கோயிலில் ஐந்து நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எப்படி தயாராகிறது பொங்கல் பானை?
எழுத்தின் அளவு:
எப்படி தயாராகிறது பொங்கல் பானை?

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
01:01

ஆர்.கே.பேட்டை: சுடுநீர் கொதிக்க வைக்கக்கூட, அடுப்பங்கரை பக்கம் செல்லாத பெண்களும், பொங்கல் பண்டிகையின் போது, மண் பானையை வைத்து, பொங்கல் வைக்க ஆர்வம் காட்டுவது தான், தமிழர் திருநாளின் பெருமை. இதற்காக, மண் பானைகளை வாங்க, மண்பாண்ட கலைஞர்களை தேடி செல்பவர்கள், தயாரிக்கப்படும் விதத்தையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜா நகரம், சிங்கசமுத்திரம், புதுார் மேடு, கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மண் பாண்ட கலைஞர்கள் பாரம்பரியமாக, பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

1980கள் வரை, கிராமங்களில் மண் பானைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. தண்ணீர் பானைகள், மொந்தை, மடக்கு, அகல் விளக்கு, தானிய குதிர் என, வீட்டு உபயோகம், சமையல் பாத்திரங்கள் என, அனைத்தும் மண் பாண்டங்களாகவே இருந்தன. அப்போது, மண்பாண்ட கலைஞர்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக அமைந்திருந்தது. அதன் பின், காஸ் அடுப்பு பிரபலம் ஆனதும், எரிவாயுவை சேமிக்கும் விதமாக, மண்பாண்டங்கள் வழக்கொழிந்து, உலோக பாத்திரங்கள் பயன்பாடு தலை துாக்க துவங்கியது. ஆனால், பொங்கல் பண்டிகையின் போது மட்டும், மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் இன்றும் உள்ளது.

கிராமங்களில் மட்டும் இன்றி, நகரங்களிலும், பள்ளி, கல்லுாரி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தாலும், மண் பானை பொங்கல் தான். தமிழர்களின் இந்த உணர்வு மட்டுமே, மண்பாண்ட கலைஞர்களை இன்றும் வாழ வைத்து கொண்டுள்ளது. கிராமங்களில் மட்டும் இன்றி, பெருநகரங்களில் இருந்தும் பானைகளுக்கான, ’ஆர்டர்’கள் குவிவதால், அதற்கான தயாரிப்பில், கலைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கப்படும் பானைகளை, வாரச் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்த தயாரிப்பாளர்கள், தற்போது வீட்டில் இருந்தே விற்பனை செய்து வருகின்றனர். சூளையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பானைகள், அடுத்த சில மணி நேரத்தில், விற்று தீர்ந்து விடுகின்றன. பானை வாங்குவதற்காக, மண்பாண்ட கலைஞர்களின் வீடு தேடி வருபவர்களுக்கு, பானை தயாரிக்கும் விதத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சாதாரண களிமண், கலைஞர்களின் கைவண்ணத்தில், அற்புதமான வடிவத்தை பெறுவதை கண்டு வியக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar