Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெய்வழிச்சாலை கிராமத்தில் வினோத ... திரும்பிய இடமெல்லாம் திருப்பூரில் உற்சாகம்: பொங்கல் கோலாகலம் திரும்பிய இடமெல்லாம் திருப்பூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அருகே சிறுமிகளை சப்தகன்னிகளாக பாவித்து வழிபாடு
எழுத்தின் அளவு:
உடுமலை அருகே சிறுமிகளை சப்தகன்னிகளாக பாவித்து வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
11:01

மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் - கொமரலிங்கம் ரோட்டில், வடக்கு கண்ணாடிப்புத்துாரில் பரசுராமர் கோவில் உள்ளது. வளாகத்தில் வாள்முனி, செம்முனி, வேதமுனி, லாட முனி, கருமுனி, முத்துமுனி, ஜடாமுனி சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவிலில், சிறுமிகளை சப்த கன்னிகளாக வணங்கும் நுாதன வழிபாடு உள்ளது. தை மாதம் முதல் தேதியன்று, ஏழு சிறுமிகளை தேர்வு செய்வர். அவர்களை கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் கன்னிமார் சிலைகளுக்கு முன்பு, அமர வைத்து, பூ, பொட்டு, குங்குமம், வளையல்கள், மாலைகள் போன்ற அலங்கார பொருட்களும், பிஸ்கட், மிட்டாய், பழங்கள் மற்றும் பலவகை தின்பண்டங்களும் தட்டில் வைத்து படையல் நடக்கிறது. பின், அந்த சிறுமிகளை சப்தகன்னிகளாக உருவகப்படுத்தி, நெற்றியில், திருநீறு, குங்குமம் இடுகின்றனர். தொடர்ந்து, இந்த சப்தகன்னிகளின் காலில் விழுந்து, ஆசி பெறுகின்றனர். இந்த நுாதன வழிபாடு குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், சிறுமிகள் உருவத்தில் சப்தகன்னிகள் ஆசி வழங்குவதாக பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இந்த வழிபாடு தவிர தை, சித்திரை முதல்தேதி, ஆடி 18, அட்ஷயதிருதியை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar