பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
காஞ்சிபுரம்: மாட்டு பொங்கலையொட்டி, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர கோவிலில், கோபூஜை நடந்தது. பசுவின் அங்கத்தில்; அனைத்து தேவர்களும் ஒருங்கே வாசம் செய்கின்றனர். பல்வேறு சிறப்புடைய பசுக்களை, மாட்டு பொங்கல் அன்று, ’கோ பூஜை’ செய்து வணங்குவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இதனால், மாட்டு பொங்கலையொட்டி, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர கோவிலில், கோ பூஜை நடந்தது. காலை, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதனைத்தொடர்ந்து, 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், 51 பசு மற்றும் கன்றுகளுக்கு கோ பூஜை நடந்தது. விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.