பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அங்கவஸ்திரங்கள், வாரந்தோறும் ஏலம் விடப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில், அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும், வியாழன், வெள்ளி, மற்றும் சனிகிழமைகளில், காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை, கோவில் வசந்த மண்டபத்தில் ஏலம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.