Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’ஹஜ்’ மானியம் நிறுத்தம்: மத்திய அரசு ... ஏகாம்பரநாதர் பார் வேட்டை உற்சவம் : திம்மசமுத்திரம் கிராமத்தில் கோலாகலம் ஏகாம்பரநாதர் பார் வேட்டை உற்சவம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு:சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு:சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
12:01

உடுமலை: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இங்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது; மும்மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனையொட்டி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்தனர். ஒரே நேரத்தில், அதிகப்படியான மக்கள், இங்கு வருகை புரிந்ததால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

காணும் பொங்கலையொட்டி திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைப்பகுதிகளில், நேற்று பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. தவிர, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப்படுகிறது.  பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்கும் வகையில், பலரும் தங்கள் குடும்பத்தினருடன் அருவிகள், ஆறுகள், என நீர் நிலைகளுக்குசென்று நீராடி மகிழ்வது, பலவகையான உணவுகளை எடுத்துச்சென்று உண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று, காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள், பஞ்சலிங்கம் அருவியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். அருவியில், தண்ணீர் வரத்து சீராக இருந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேசமயம், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், வேட்டைத்தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar