பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
நாமக்கல்: தை அமாவாசையை முன்னிட்டு, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் அடுத்த, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை அமாவசையன்று திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, கடந்த, 14ல் துவங்கியது. இரவு, 7:30 மணிக்கு விநாயகர் பூஜை, 64 யோகிணி மற்றும், 64 பைரவர் பூஜைகள் நடந்தன. 15 காலை, 8:00 மணிக்கு மகாசண்டி ?ஹாம யாக பூஜை, மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 7:00 மணிக்கு கோமாதா பூஜை, 8:00 மணிக்கு அம்மனுக்கு மாங்கல்யதாரணம், 9:00 மணிக்கு திருமஞ்சணம் மற்றும் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, மகரஜோதி அழைப்பு பூஜைகள் நடந்தன. வீரக்குமாரர்கள் கத்திப்போட்டு வலம் வரும் நிகழ்ச்சி, லிங்க பைரவி மற்றும் சாமுண்டி கோலாட்டக் குழுவினரின் கோலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. இன்று காலை, வசந்த உற்சவம் எனும் மஞ்சள் நீர் விழாவை, சென்னை போலீஸ் ஐ.ஜி., ஜெயராம், லட்சுமி ஜெயராம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். விழாவை முன்னிட்டு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வீரக்குமாரர்கள் நடை பயணமாக கோவிலுக்கு வந்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.