Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரி கோவிலை தவறாக அச்சிட்டதற்கு ... தை வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு தை வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம்: ஜன.,27ல் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம்: ஜன.,27ல் தெப்பத்திருவிழா

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
10:01

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. இத்திருவிழாவிற்கான அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் ஜன.,17 மாலை கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு நடந்தது. நேற்று காலை விசாக கொறடு மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயகர் முன்பு ரிஷப யாகம் முடிந்து, சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு அபிேஷக, ஆராதனை நடந்தது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி செயலாளர் விஜயராகவன், உப தலைவர் ராஜகோபால், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

திருவிழா நடக்கும் ஜன.,27 வரை தினமும் காலை சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர்.ஜன.,26ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும் முடிந்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன., 27 காலை ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக் குளத்தில் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நடைபெறும். கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிப்பட்டம் யானை தெய்வானை மீது வைத்து ரத வீதிகளில் கொண்டு வருவது வழக்கம். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் வீதி உலா நிகழ்ச்சி இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar