அலங்காநல்லுார்;அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் புஷ்பாஞ்சலி உற்ஸவம் நடந்தது. இங்கு ஐயப்பசுவாமி புலி மீது அமர்ந்த உருவம் வண்ணகோலமிட்டு, வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் சுவாமிக்கு லட்சார்ச்சனை, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் குழுவினர் செய்திருந்தனர்.