Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் ... உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப பணி இழுத்தடிப்பு: பக்தர்கள் கோரிக்கை உத்தரகோசமங்கை கோயில் பிரகார மண்டப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் தைப்பூசவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
10:01

தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவில், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில்களில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையாகிய சிவபெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலமாக விளங்குவது சுவாமிமலை. இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும், உற்சவர் சண்முகசுவாமிக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சண்முகசுவாமி வள்ளி - தெய்வானையுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலைக்கோயிலில் இருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும், 29ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தொடர்ந்து காலை, 10:௦௦ மணிக்கு காவிரியில் தீர்த்தவாரியும், வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதிவுலாவும் நடைபெறவுள்ளது. திருவிடைமருதுார்: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றதால், நட்சத்திர தோஷம் நீங்கும் தலமாகவும் விளங்குகிறது மகாலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி காலை, 9:15 மணிக்கு தேரோட்டமும், 31ம் தேதி மதியம் காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar