Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முருகனுக்கு அரோகரா... சேலத்தில் ... பழநி மலைகோயில் 3,000 கிலோ பூக்களால் அலங்காரம் பழநி மலைகோயில் 3,000 கிலோ பூக்களால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்காலம்மன் தைப்பூச தேர்த்திருவிழா: தேர் வடம் பிடித்து இழுத்த திரளான பெண்கள்
எழுத்தின் அளவு:
கொங்காலம்மன் தைப்பூச தேர்த்திருவிழா: தேர் வடம் பிடித்து இழுத்த திரளான பெண்கள்

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
12:02

ஈரோடு: கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், ஏராளமான பெண்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கொங்காலம்மன் கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 29ல் பொங்கல், மாவிளக்கு ஊர்வலம், சிம்மவாகன புறப்பாடு நடந்தது. முக்கிய நாளான நேற்று, தைப்பூச தேரோட்டம் நடந்தது. கோவில் முன் அலங்கரித்து நிறுத்தப்பட்ட தேரில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். ஆர்.கே.வி., ரோடு, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, பெரியார் வீதி வழியாக காரை வாய்க்கால் சென்று, அங்கிருந்து திரும்பி கச்சேரிவீதி, வழியாக தேர் கோவிலுக்கு வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வடம் பிடித்தனர். பலர், அம்மன் அருள் வந்து ரோட்டில் ஆடியபடி வந்தனர். இதே போல், தைப்பூசம் விழா திண்டல் வேலாயுத சுவாமி கோவில் மற்றும் வலசு மலை முருகன் கோவிலிலும் நடந்தது. பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது.

* மொடக்குறிச்சி அருகே, அரச்சலூர் நாகமலையில், தீர்த்தகுமாரசுவாமி கோவில் உள்ளது. நேற்று தைப்பூச திருநாளை முன்னிட்டு, அரச்சலூர் அறச்சாலை அம்மன் கோவிலிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர், அபிஷேகம், அன்னதானத்திற்கு தேவையான பூ, பழம், தேங்காய், அரிசி, பால், தயிர், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டது. காலை, 7:00 மணியளவில், நாகமலை ஆண்டவருக்கு பால் அபிஷேகம், தீபாராதனை, தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

* பெருந்துறை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், நேற்று, 14ம் ஆண்டு, தைப்பூச திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, விஷேச அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, காஞ்சிக்கோவில் ரோடு விநாயகர் கோவிலில் இருந்து, காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, பால்குடம், பன்னீர் குடம் மற்றும் காவடி ஏந்தி வந்தனர். நிறைவாக, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar