Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் 2 ... ராமநாதபுரத்தில் தைப்பூச கோலாகலம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை ராமநாதபுரத்தில் தைப்பூச கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச விழா தேரோட்டத்துடன் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் தைப்பூச விழா தேரோட்டத்துடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
01:02

மருதமலை : முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை கோவில் கருதப்படுகிறது. கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் பத்து நாள் தைப்பூசத் திருவிழா துவங்கியது. முதல் நாள் ஆறு நாட்கள், காலையில் யாக பூஜைகளும், திருவீதியுலாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகமும், ராஜ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலசபூஜை, பட்டுவஸ்திரம் சார்த்துதல், தாரைவார்த்து கொடுத்தல் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதன்பின், காலை, 11:00 மணிக்கு, வெள்ளையானையில் திருவீதியுலா வந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அமைச்சர் வேலுமணி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்களின் அரோகரா முழக்கங்களுடனும், பலவகையான வாத்தியங்களின் இசையுடனும் திருத்தேர் கோவிலைச் சுற்றி வந்தது. அட்டப்பாடி, நரசீபுரம், கணபதி, இடையர்பாளையம் போன்ற பல பகுதிகளில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரை சந்திரகிரகணம் இருந்ததால், மாலை 4:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதேபோல், தைப்பூசத்தையொட்டி, கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு, பால தண்டாயுதபாணி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 9:30 மணிக்கு தேர்த் திருவிழா நடந்தது. பேரூர் மருதாசல அடிகள் விநாயகர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின்னர், பேரூர் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதிகளின் வழியே, தேர் உலா வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar