Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலுக்குள் கடைகள் ... மதுரை பொன்மேனி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் மதுரை பொன்மேனி காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2018
12:02

நாகை: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாக ஆதினம் குற்றம் சாட்டியுள்ளது.

Default Image
Next News

மயிலாடுதுறையில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரபாடல் பெற்ற இக்கோயிலில் தட்சன் யாகத்திற்கு சென்றதால் சிவனை பி ரிந்த தாட்சாயினி, சாபத்தால் மயிலாக உருவெடுத்து மயிலாடுதுறையில்  சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து மீண்டும் சிவனை அடைந்த புராண வரலாறு கொண்டது. 3,78,913 ச துர அடிகொண்ட இந்த கோயில் 7ம் நூற்றாண்டை சோ;ந்தது. இந்த கோயிலில் மயூரநாதர் லிங்க வடிவிலும், வட பகுதியில் அபயாம்பிகை தனி சன்னிதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. அபயாம்பிகைக்கு தினந்தோறும் 6 கால பூஜை நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் அர்ச்சகர் மாறி மாறி பூஜை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தைவெள்ளி விசேஷமான நாள் என்பதால் அன்றைக்கு பூஜை நடத்திய ராஜ் என்ற அர்ச்சகர் செய்திருந்தார்.

மாலையில் நடைபெற்ற சந்தன காப்பு அலங்காரத்தின் போது அர்ச்சகர் அம்பாளுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை கண்ட பக்தர்கள் தங்களது செல்போன்மூலம் சுடிதார் அணிந்த நிலையில் காட்சி தந்த அபாயம்பிகையை புகைப்படம் எடுத்துள்ளனர்.  ஒருசிலர் அந்த படத்தை தன் நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளனர். தற்பொழுது அந்த புகைப்படம் வாட்சப், முகநூல் மூலம் வைரலாக பரவிவருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த புகா ரின் பேரில் அம்பாளுக்கு சுடிதார் அணிவித்த ராஜ் மற்றும் கல்யாணம் ஆகிய இரண்டு குருக்கள்களையும் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அ ம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar