Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளியை சிறை எடுத்த வேலன்: ... வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் வரும் பக்தர்கள் குறைவு வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எடப்பாடி பக்தர்கள் பழநியில் பாரம்பரிய வழிபாடு : 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
10:02

பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Default Image
Next News

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 350 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.இவ்வாண்டு வழிபாட்டுக்காக ஜன.,31, தைப்பூச நாளில் புறப்பட்டு, இளநீர் காவடி, பால்காவடி, புஷ்பகாவடி, சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டனர். புதுப்பேட்டை, எடப்பாடி, ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக நேற்று பழநிக்கு வந்தனர்.

15 டன் பஞ்சாமிர்தம் : மானுார் ஆற்றுப்பாலத்தில் காவடி பூஜை செய்து ஊர்வலமாக பழநி மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக வழிபாட்டுக்குழுவினர் மூலம் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் 10டன் மலை வாழைப்பழம், மூன்று டன் பேரீச்சை, 15 மூடை கற்கண்டு, 10டன் சர்க்கரை மூடைகள், 12 டின்களில் தேன்,நெய், மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அபிஷேகம் செய்து அந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ளனர்.

மலைக்கோயிலில் சாயரட்சை கட்டளை பூஜை, ராஜஅலங்காரம், தங்க ரதம், இரவு 8:00 மணிக்கு ராக்கால கட்டளை பூஜையில் சுவாமிதரிசனம் செய்யும் இவர்கள் குடும்பத்துடன் மலைக்கோயிலில் தங்கி வழிபடுகின்றனர். நாளை தங்களது ஊருக்கு புறப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலில் பருவத ராஜகுல சமுதாய மக்கள் மட்டுமே தங்கி வழிபட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar