Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளியை சிறை எடுத்த வேலன்: ... வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் வரும் பக்தர்கள் குறைவு வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எடப்பாடி பக்தர்கள் பழநியில் பாரம்பரிய வழிபாடு : 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
10:02

பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Default Image
Next News

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 350 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.இவ்வாண்டு வழிபாட்டுக்காக ஜன.,31, தைப்பூச நாளில் புறப்பட்டு, இளநீர் காவடி, பால்காவடி, புஷ்பகாவடி, சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டனர். புதுப்பேட்டை, எடப்பாடி, ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக நேற்று பழநிக்கு வந்தனர்.

15 டன் பஞ்சாமிர்தம் : மானுார் ஆற்றுப்பாலத்தில் காவடி பூஜை செய்து ஊர்வலமாக பழநி மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக வழிபாட்டுக்குழுவினர் மூலம் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் 10டன் மலை வாழைப்பழம், மூன்று டன் பேரீச்சை, 15 மூடை கற்கண்டு, 10டன் சர்க்கரை மூடைகள், 12 டின்களில் தேன்,நெய், மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அபிஷேகம் செய்து அந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க உள்ளனர்.

மலைக்கோயிலில் சாயரட்சை கட்டளை பூஜை, ராஜஅலங்காரம், தங்க ரதம், இரவு 8:00 மணிக்கு ராக்கால கட்டளை பூஜையில் சுவாமிதரிசனம் செய்யும் இவர்கள் குடும்பத்துடன் மலைக்கோயிலில் தங்கி வழிபடுகின்றனர். நாளை தங்களது ஊருக்கு புறப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலில் பருவத ராஜகுல சமுதாய மக்கள் மட்டுமே தங்கி வழிபட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar