பதிவு செய்த நாள்
09
பிப்
2018
12:02
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், தை கடை வியாழனை முன்னிட்டு, சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த, தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், தை மாதம் நான்காவது வியாழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின், மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க பாபாவிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.