உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில், கருமாத்துார் பொன்னாங்கன் கோயில் சிவராத்திரி வழிபாட்டுக்கான அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் தலைமையில் நடந்தது. விழாவிற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்புசாமி கோயிலில் இருந்து பெட்டி எடுத்துச் சென்று வழிபடுபவர். இதுதொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் கடந்தாண்டு பெட்டி எடுக்கவில்லை. இதனால் அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. உத்தப்பநாயக்கனுார் எஸ்.ஐ., லிங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதிமன்றம் உத்தரவுபடி முடிவு எடுப்பது என்றும், உத்தரவு கிடைக்காத பட்சத்தில் ஆர்.டி.ஓ., உத்தரவுபடி நடந்து கொள்வது என்றும் முடிவு செய்தனர்.கருமாத்துார் பொன்னாங்கன் கோயில் கடந்தாண்டு வழிபாடு செய்தது போல் இந்த ஆண்டும் வழிபாடு நடத்துவது என முடிவு செய்தனர்.