பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
திருவள்ளூர்: திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம், நாளை நடைபெறுகிறது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. பக்தர்கள் பலர், இதில் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். நாளை காலை, 9:00 மணிக்கு துவங்கும் மூல மந்திர ஹோமம், காலை, 11:00 மணி வரை நடக்கிறது. பின், மகா தீபாராதனை நடைபெறும்.அன்று, மூல நட்சத்திரத்துடன், ஏகாதசி திதியும் இணைந்து வருவதால், ஆஞ்சநேயரை வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.பக்தர்கள் அதிகம் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.