பதிவு செய்த நாள்
12
பிப்
2018
01:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா நாளை (13ம் தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி, நாளை காலை, 7:00 மணிக்கு மேல், கணபதி ேஹாமம், காலை, 10:00 மணிக்கு மேல் கம்பம் வெட்டி கங்கையில் வைத்தல், இரவு, 8:00 மணிக்கு கோவில் முன் கம்பம் நட்டு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு மேல் திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல், 26ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு பெரிய விநாயகர் கோவிலிலிருந்து அனிக்கூடை எடுத்து வருதல், இரவு, 9:00 மணிக்கு பொன்னேர் கட்டி கம்பு விதைத்து மாவு இடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு மேல், ஊர் பெரிய கிணற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வருதல், வரும், 28ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து மாரியம்மனுக்கு சீர் கொண்டு வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல்; மாலை 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.