பதிவு செய்த நாள்
12
பிப்
2018
01:02
உடுமலை: உடுமலையில், நாளை மகா சிவராத்திரியையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.சிவபெருமானின் முழுமையான அருளைப்பெற, விரதமிருந்து, சிந்தையிலும் சிவனின் எண்ணத்தை நிறைத்து, இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடுவது தான் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.நாளை மாலை, (13ம்தேதி) மகாசிவராத்திரி துவங்குகிறது.உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், இதையொட்டி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை, காலை, 7:00 மணிக்கு பூலாங்கிணறு பகுதியிலிருந்து, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு திருச்சப்பரம் அழைத்து வரும் நிகழ்ச்சி துவங்குகிறது.
நாளை, இரவு 8:00 மணிக்கு கோவிலில் திருச்சப்பரபூஜை நடக்கிறது. தொடர்ந்து முதல்கால பூஜை மற்றும் அபிேஷகம் இடம்பெறுகின்றன. இரவு, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சோடச உபசார தீபாராதனையும் நடக்கின்றன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்களில், நாளை, மாலை பிரதோஷ வழிபாட்டுடன், சிவராத்திரி சிறப்பு பூஜையும் நடக்கிறது. கொடிங்கியம், மகாலட்சுமி அம்மன் கோவிலில், நாளை, இரவு, 10:00 மணிக்கு வழிபாடு துவங்குகிறது.