பதிவு செய்த நாள்
13
பிப்
2018
12:02
மடத்துக்குளம்: மழைபெய்ய வேண்டி, மக்கள் வழிபடும் கருமாரியம்மன் கோவில் மடத்துக்குளம் – வேடபட்டிரோட்டில் உள்ளது. கடந்த நுாற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய வாழ்வதாரம் விவசாயம் மட்டுமேயாகும். இதனால், ஆண்டுதோறும் குறித்த பருவகாலத்தில் அதிக மழை பொழிய வேண்டும் என்பதே கிராம மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக, இருந்தது. இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
இப்படிபட்ட காலகட்டத்தில், எதிர்பாராத நிலையில் பருவமழை பொய்த்து போனதால், வறட்சி மக்களை வதைத்தது. வறட்சியிலிருந்து மீள, மழை தேவை என கோரிக்கை வைத்து, மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். இந்த வழிபாடுகள் மழை வழங்கும் அம்மனை நினைத்து நடத்துவது கிராமத்தினர் வழக்கம். கார் என்பதற்கு, ‘நீர் மேகம்,’என அர்த்தம் உண்டு. ‘கார்காலம்’ என ஒரு பருவமும் உள்ளது. இதனால் இந்த சாமியை மக்கள் கார்மாரியம்மன் என அழைத்து, பின்னாளில் கருமாரியம்மன் என மருவியது. கே.டி.எல்., வேடபட்டி ரோட்டில் இந்த கோவில் உள்ளது. விளைநிலங்களுக்கு மத்தியில், அமராவதி கிளைவாய்க்கால் கரையில் அமைந்துள்ள கருமாரியம்மன் பலரின் இஷ்ட தெய்வமாக உள்ளது.